தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு நாள் சார்பில் நடைபெற்ற அரசியல் அமைப்பு சட்ட நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இன்று காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் அரசியலமைப்பு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்துப் பேசப்பட்டது. இந்திய அரசியலமைப்பை மாற்ற ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், அரசியல் சட்டத்தில் எந்த மதம், பிரிவு, கலாச்சாரமாக இருந்தாலும் அனைவரும் சமம். பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு எப்படி ஒத்துப்போகும். அனைவரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது சாத்தியம் இல்லை. இந்தியா பல மொழிகளைக் கொண்டது. ஆனாலும் 70 ஆண்டுகளாக ஒன்றாக உள்ளது. இந்திய சட்டம் அனைவருக்கும் ஒரே உரிமையை கொடுக்கிறது என்றார்.
அத்துடன், முன்னாள் காவல் துறை அதிகாரி அனுசியா மிக பெரிய தியாகி, காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளராக ஏற்று உள்ளோம். அவருக்கு வரும் கொலை மிரட்டல்கள் குறித்து காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட செயல்முறையைச் செய்வோம். மத்திய அரசாங்கம் தேர்தல் கமிசன் விதிமுறைகளைப் பல முறை மீறி இருக்கிறது. தேர்தல் கமிஷன் எப்படி செயல்பட வேண்டும் என்று எடுத்துரைக்கும் வகையில் ஒரு குழு அமைத்து வரைவு அறிக்கை தயார் செய்ய செயல்பட்டு வருகிறோம் என கூறினார்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி அவருடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகளைக் காப்பாற்றட்டும். அதற்குப் பிறகு பிற கட்சிகளை பற்றி பேசட்டும். ஒழுங்கு நடவடிக்கை குழு அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்குக் கீழ் வருகிறது. தமிழக ஆளுநர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார். ஆளுநரை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தது ஒன்று. வெளியே வந்து பேசியது ஒன்று என தெரிவித்தார்.