நீட் தேர்வு ரத்து குறித்து தமிழ்நாடு அரசின் முடிவு – மா.சுப்பிரமணியன் விளக்கம்

நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் குடியரசுத்தலைவர் மற்றும் உள்துறை அமைச்சகமும் எடுக்கும் முடிவுகளை பொறுத்து தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் குடியரசுத்தலைவர் மற்றும் உள்துறை அமைச்சகமும் எடுக்கும் முடிவுகளை பொறுத்து தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மாபெரும் கொரோனா சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சாலை விபத்துகளில் காயம் அடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்கும் வகையில் 688 மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

 

இதன் வாயிலாக இதுவரை ஏற்பட்ட 89 ஆயிரத்து 605 விபத்துகளில் சிக்கியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என கூறினார். இதற்காக 80.66 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் குடியரசுத்தலைவரும், உள்துறை அமைச்சகமும் எடுக்கும் முடிவுகளை பொறுத்து தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்தார்.

நீட் தேர்வுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சரே எதிராக இருப்பதாக தெரிவித்த அவர், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஹெல்த் மிக்ஸ் விவகாரம், டெண்டர் விட்டு முடிந்துவிட்டது என்றார். டெண்டர் விட்டுள்ள நிறுவனம் மீது எவ்வித குற்றச்சாட்டும் எழாத நிலையில் எதற்கு கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும்? அதே நிறுவனம் வழங்கிய பொங்கல் தொகுப்பில் என்ன குறையை கண்டீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.