தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 4,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 4,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 512 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 75 ஆயிரத்து 190 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து 6 ஆயிரத்து 13 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 3 ஆயிரத்து 349 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 47 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 71 பேர் அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

சென்னையிலும் புதிதாக 275 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 414 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.