தனியார் பள்ளியின் பாட புத்தகத்தில் தமன்னா பாட்டியா பற்றிய வாசகம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ஹெப்பலில் உள்ள சிந்தி தனியார் பள்ளி இந்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிந்தி பள்ளியின் 7ம் வகுப்பு பாடத்தில் நடிகை தமன்னா பற்றிய வாசகம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாடத்தில் தமன்னா பற்றிய உரையை சேர்க்க பல பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உரையின் சில பகுதிகளும் ஊடகங்களில் பரப்பப்பட்டன. அவர் பிறந்த தேதி, அவர் நடித்த திரைப்படங்களின் விவரங்கள் பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. நடிகை தெலுங்கு மற்றும் தமிழில் நடித்த திரைப்படங்கள் மற்றும் அவரது நடிப்பு பற்றி இந்த உரை விளக்குகிறது.
தமன்னாவின் இடம்பெயர்வு, சமூகம் மற்றும் மோதல் என்ற தலைப்பில் உள்ளது, இதில் பாலிவுட் நடிகர் ரன்பீர் சிங்கும் இடம்பெற்றுள்ளார். தமன்னாவை பாடத்தில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், அவரைப் பற்றி எங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று கூறினர். நடிகையிடம் இருந்து குழந்தைகள் என்ன கற்றுக் கொள்வார்கள் என்று பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து பெற்றோர்கள் குழந்தை உரிமை ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கத்திடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.