முக்கியச் செய்திகள்செய்திகள்விளையாட்டு

டி20 உலக கோப்பை | முதல்முறையாக இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா!… முடிவுக்கு வந்த ஆப்கானிஸ்தான் அணியின் கனவு…!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளது.முதல்முறையாக இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா.

2024 டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்கா அணியும் சிறப்பான பந்துவீச்சால் 11.5 ஓவர்களில் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அஸ்மத்துல்லா ஓமர்சாய் 10 ரன்கள் எடுத்திருந்தார். உமர்சாய் மட்டுமே அந்த அணிக்காக இரட்டை இலக்கை தொட்டார்.  தென்னாப்பிரிக்கா சார்பில் மார்கோ ஜான்சன் மற்றும் தப்ரேஸ் ஷம்சி அதிகபட்சமாக தலா 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். இதுபோக, ரபாடா மற்றும் நோர்க்யா தலா 2 விக்கெட்களையும் எடுத்திருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு இலக்கை விரட்டி வெற்றிபெற்றது. இதன்மூலம், தென்னாப்பிரிக்கா அணி உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.  நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதியோடு வெளியேறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

’இந்த பாரதம் ரிஷிகளாலும் ஆன்மீக இலக்கியங்களாலும் உருவாக்கப்பட்டது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி

G SaravanaKumar

ருமேனியா பட விழாவில் நயன்தாராவின் ’கூழாங்கல்’

Gayathri Venkatesan

உள்ளாட்சித் தேர்தல்: 97 ஆயிரம் பேர் வேட்புமனு தாக்கல்

EZHILARASAN D

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading