ஆப்கானிஸ்தானின் 85 சதவீத பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக தாலிபான் தீவிரவாத அமைப்பின் தூதுக்குழு ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் முழுமையாக திரும்ப பெற்றுவிடும் என கடந்த வாரம் அமெரிகக் அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். ஏற்கெனவே 90% அமெரிக்கப்படைகள் நாடு திரும்பிவிட்டனர். மீதமுள்ளவர்களும் வரும் ஆகஸ்ட் 31க்கும் முழுமையாக திரும்பிவிடுவர் . இந்நிலையில் அமெரிக்கப்படைகள் திரும்ப பெறப்பட்ட பகுதிகளில் தாலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே தாலிபான் செயல்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தாலிபான் தீவிரவாதிகள்இந்நிலையில் ரஷ்யாவின் மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்த தாலிபானின் தூதுக்குழு, ஏற்கெனவே மொத்தமுள்ள 350 மாவட்டங்களில் 290 மாவட்டங்களை கைப்பற்றிவிட்டதாக தெரிவித்தது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் – ஈரான் எல்லை பகுதியை முழுமையாக கைப்பற்றி விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை ரஷ்யாவும் உறுதி செய்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றிய பிறகு அது திவீரவாதிகளின் மையமாக இருக்காது எனவும், குறிப்பாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்பட விடமாட்டோம் எனவும் தாலிபான் தூதுக்குழு தெரிவித்துள்ளது.
ஆனால் இது குறித்து ஆப்கானிஸ்தானின் அமைச்சரவை செய்தி தொடர்பாளர், தாரிக் ஏரியான் கூறும்போது, தாலிபான் தீவிரவாத அமைப்பு கூறுவதில் உண்மை இல்லை என்றும், ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார். ஒரு சிலப் பகுதிகளில் மட்டுமே தாலிபானின் ஆதிக்கம் இருப்பதாக தெரிவித்த செய்தி தொடர்பாளர், அந்த பகுதிகளை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆப்கான் அரசு எடுத்து வருவதாக கூறினார்.