நிவாரண நிதி மூலம் ரூ.472 கோடி வசூல்: அமைச்சர் தகவல்

முதலமைச்சர் நிவாரண நிதி மூலம் இதுவரை 472 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் நிவாரண நிதி தொடர்பான இணையப் பக்கத்தை தமிழ்நாடு…

முதலமைச்சர் நிவாரண நிதி மூலம் இதுவரை 472 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் நிவாரண நிதி தொடர்பான இணையப் பக்கத்தை தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த மே மாதம் 7-ம் தேதிக்கு பின் பெறப்பட்ட நிதிகளை கொரோனா நிதியாக அடையாளப்படுத்தி, நிதி கணக்கை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

ஜனநாயகத்தில் அரசின் வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியம் என தெரிவித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்நாடு அரசின் அனைத்து விவகாரங்களையும் கணினிமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.