இதேநாளில் சுவாமி விவேகானந்தர், உலகளாவிய சகோதரத்துவம் என்ற சனாதன தர்ம செய்தியை உலகுக்கு வழங்கியதாக ஆளுநர் மாளிகை X தளத்தில் பதிவிட்டுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஒழிப்பது போல், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அமைச்சர் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டது. ஒருபுறம் எதிர்ப்பு எழுந்தாழும், மற்றொரு புறம் உதயநிதி ஸ்டாலினுக்கு பலர் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி – பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்!!
இவ்வாறு கடந்த சில நாட்களாக ’சனாதனம்’ குறித்த காரசார வாதம் இணையத்தை வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சுவாமி விவேகானந்தர் சனாதன தர்ம செய்தியை வழங்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
130 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உள்ள உலக சமயப் பாராளுமன்றத்தில் மனிதகுலத்தின் உலகளாவிய சகோதரத்துவம் என்ற சனாதன தர்ம செய்தியை உலகுக்கு வழங்கினார். காலத்தால் அழியாத இச்செய்தி இன்றைக்கும் மிகவும் பொருத்தமானது. pic.twitter.com/h0livSK2tl
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 11, 2023
இதுகுறித்த அவரது பதிவில், “130 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உள்ள உலக சமயப் பாராளுமன்றத்தில் மனிதகுலத்தின் உலகளாவிய சகோதரத்துவம் என்ற சனாதன தர்ம செய்தியை உலகுக்கு வழங்கினார். காலத்தால் அழியாத இச்செய்தி இன்றைக்கும் மிகவும் பொருத்தமானது” என்று பதிவிடப்பட்டுள்ளது.







