‘நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை’ – திருமாவளவன்

உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில்…

உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வீரபாண்டியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், நீதிபதி நியமனங்களில் இட ஒதுக்கீடு தேவை என கோரி முழக்கம் எழுப்பப்பட்டது.

அதைத் தொடர்ந்து மேடையில் திருமாவளவன் பேசியதாவது: உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. இது எவ்வளவு பெரிய அநீதி என்பதை நாம் உணராமல் உள்ளோம். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் திராவிட இயக்கங்கள் விமர்சிப்பத்தை சிலர் கடமையாக செய்து வருகிறார்கள். இது கவலை அளிக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34, அதில் 30 பேர் உயர்சாதியினர், 4 பேர் மட்டுமே விளிம்பு நிலை சமூகத்தை சார்ந்தவர்கள். இது எவ்வளவு பெரிய அநீதி?. பார்ப்பனர்களின் ஆதிக்கம் இன்னும் இங்கே கொட்டமடிக்கிறது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை. சாதி உணர்வை தூண்டுவது என்பது பட்டியல் மற்றும் ஒபிசி மக்கள் அணி திரண்டு விட கூடாது என்பதற்காக, மிக சாதுர்யமாக சாதி பெயரால் இந்துக்களாக பிளவுப்படுத்துகிறார்கள். இந்தியர்களை மத அடிப்படையில் பிளவு படுத்துகிறார்கள்.

அகில இந்திய அளவில் அதிகாரமுள்ள வேலைகளில் இட ஒதுக்கீடு இல்லை நாலாந்தர வேலைகளில் மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் எஸ்சி பிரிவினருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் இதுவரை ஒரு துறையில் கூட நூறு சதவீதம் இந்த இட ஒதுக்கீட்டை பின்பற்றி முழுமையாக நிரப்பியது இல்லை. தமிழ்நாட்டடிலும் சங்பரிவார் கொட்டமடிக்கிறது. பெரியார் சிலைகளை அவமதிக்கிறது. தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டிய முக்கியயமான காலத்தில் நாம் இருக்கிறோம். தமிழ்நாட்டை பாதுகாத்தால் மட்டுமே, இந்தியா முழுவதும் போராட முடியும். சங்பரிவார் சக்திகளை விரட்டி அடிக்க வேண்டும். அகில இந்திய அளவில் ஆட்சி பீடத்திலிருந்து அவர்களை அகற்ற வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

பின்னர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதவாது:  இன்று நாம் இவ்வாறு போராடுவதற்கு வெட்க பட வேண்டியவர்கள் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அல்லது அவர்களை நியமித்த அதிகாரம் படைத்தவர்கள். என் மீது வழக்கு போடட்டும். அனைத்தையும் பச்சையாக அம்பலப்படுத்துகிறேன். மனு நீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் ஜனநாயகம் தழைக்குமா?.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீதி துறையில் இட ஒதுக்கீடு தேவை என்பது மிக முக்கியமானது. ஏனென்றால் நிர்வாகம் மற்றும் நாடாளுமன்ற துறைகள் எடுக்கும் முடிவுகளை சரியா தவறா என முடிவு செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உள்ளது. இதுவரை, நாம் எடுத்த போராட்டங்கள் தோற்றது இல்லை, வெற்றி கொஞ்சம் தள்ளி போகலாம் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு வீரமணி பேசினார்.

அண்மைச் செய்தி: பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபடாத ஆப்பிள் – காரணம் என்ன?

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கி வீரமணி, பயங்கரவாத இயக்கங்களை தனித்தனியாக நடத்தி வரும் அமைப்பு ஆர்எஸ்எஸ். மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்எஸ்எஸ். வேறு எந்த அமைப்பும் இப்படி தடை செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், வெடி மருந்துகளை பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் எம்பிக்களாக உள்ள வரலாறு உள்ளது. இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் பேரணியால் மத கலவரங்கள் நடக்க வாய்ப்புள்ளதால் அதை தடை செய்ய அரசு முடிவு செய்கிறது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பு இவ்வாறு இருந்தால் விளைவுகள் ஏற்பட்டால் நீதிமன்றம்தான் பொறுப்பு என அரசு சொல்ல முடியுமா? என தெரிவித்தார். இறுதி தீர்ப்பு மக்கள் தீர்ப்பு என 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சுட்டிக்காட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.