முக்கியச் செய்திகள் தமிழகம்

திருவண்ணாமலை கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, செங்கத்தில் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஎம்-ல் கொள்ளை போன சம்பவத்தை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம் ஆகிய பகுதியில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி அதிலிருந்து 72 லட்சத்து 78 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். ஒரே நாளில் திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த கொள்ளையில் வடமாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அந்த விசாரணையில் அரியானாவை சேர்ந்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி அரியானா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.

அண்மை செய்திகள்: சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு… நம்பர் பிளேட் தவறாக இருந்தால் அபராதம்!

அதில், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை கும்பலின் தலைவன் முகமது ஆரிப் (வயது 35) மற்றும் ஆசாத் (வயது 37) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் அரியானாவில் கைது செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். கொள்ளையர்கள் 2 பேரையும் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொள்ளை கும்பலை நேற்று காலை திருவண்ணாமலை அழைத்து வந்து கொள்ளை குறித்தும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்தும் விசாரணை செய்ய 10 நாட்கள் போலீசார் சார்பில் மனு கோரப்பட்டதை அடுத்து, நீதிபதி கவியரசன் ஏழு நாட்கள் அனுமதி அளித்திருந்தார்.

தற்போது, குற்றவாளிகள் போலீசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில்,
எப்படி கொள்ளை அடிக்கப்பட்டது என்றும் கொள்ளையடிப்பதற்கு உள்ளூரில் யாரவது
உதவினார்களா? என்றும் விசாரனை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், செங்கத்தில் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டது இப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாரதியார் நினைவு நூற்றாண்டு; மூத்த ஆய்வாளர்களுக்கு விருது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Arivazhagan Chinnasamy

5 மணி நேரத்தில் 52 லட்சம் பனை விதைகள்-ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சாதனை

G SaravanaKumar

பாமக இளைஞரணி தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் பதவி விலகல்

G SaravanaKumar