அதேபோல அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15%, சுயநிதி கல்லூரிகளில் 10% இடங்களை அதிகரித்துக்கொள்ளலாம்.
சமூக நீதியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஜூன் 30 ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்கள் வேறு கல்லூரிக்கு சென்றாலும் கட்டணம், சான்றிதழ்களை கல்லூரிகள் திரும்ப கொடுக்க வேண்டும்.
திருச்சி பெரியார் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. அது தவறான தகவல்” என அமைச்சர் பொன்முடி கூறினார்.







