29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

புதுச்சேரியில் டிச.4-ம் தேதி கல்லூரிகளுக்கும் விடுமுறை!

புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் வரும் 4-ம் தேதி பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில்,  கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,  காரைக்கால்,  ஏனாம் மாவட்ட பள்ளிகளுக்கு டிச. 4-ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் டிசம்பர் 3-ம் தேதி புயலாக மாறும் என்றும் அது திங்கள்கிழமை இரவு அல்லது செவ்வாயன்று காலை தெற்கு ஆந்திரம் வடதமிழகத்திற்கு இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள்:  ஒடிசாவில் சர்வதேச மணல் சிற்பக் கலை விழா தொடக்கம்!

இதன் காரணமாக, வரும் 4-ம் தேதி புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக டிசம்பர் 4-ம் தேதி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  சனிக்கிழமை காலையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading