புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை; புதுச்சேரி வந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழு

புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, பாதிப்புகளை எதிர்கொள்ளத் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதுச்சேரி வந்துள்ளனர்.  தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற் றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று புதுச்சேரியைக் கடக்கும்…

புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, பாதிப்புகளை எதிர்கொள்ளத் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதுச்சேரி வந்துள்ளனர். 

தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற் றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று புதுச்சேரியைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாகப் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மழை மற்றும் புயலால் புதுச்சேரியில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு மூன்று பேரிடர் மீட்பு படை குழுவினர் வந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முதற்கட்டமாக 25 நபர்கள் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் இன்று மாலை புதுச்சேரி வந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மீட்பு குழுவினரை மாவட்ட ஆட்சியர் வல்லவன் நேரில் சந்தித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் எந்தெந்த பகுதிகளில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அங்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட விஷயங்களைப் பேரிடர் மீட்பு குழுவினரிடம் எடுத்துரைத்தார்.

இன்று ஒரு குழு புதுச்சேரிக்கு வந்துள்ளதுள்ள நிலையில் நாளை மற்றொரு குழு புதுச்சேரிக்கும், ஒரு குழு காரைக்காலுக்கும் செல்ல உள்ளது. இதனிடையே முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள நாளை காலை பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.