கும்பகோணத்தில் உள்ள சீனிவாச பெருமாள் ஆலயத்தின் பங்குனி மாத பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கும்பகோணத்தில் உள்ள 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான நாச்சியார் கோவில் சீனிவாசபெருமாள் ஆலயத்தின் பங்குனி மாத பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கல் கருட சேவை வரும் 1 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கொடி ஏற்றத்தை முன்னிட்டு உற்சவர் சீனிவாச பெருமாள் , வஞ்சுளவள்ளி தாயாருடன் காட்சியளித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து சுவாமி தாிசனம் செய்தனா்.
—-கா. ரூபி







