கும்பகோணத்தில் நடைபெற்ற சிறுதானிய உணவு திருவிழா

கும்பகோணத்தில் நடைபெற்ற சிறுதானிய உணவு திருவிழாவில் கம்பு, கேழ்வரகு, திணை , சாமை உள்ளிட்ட பல்வேறு சிறுதானியங்களில் உணவு வகைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. உணவு பழக்க வழக்கங்கள் மாறியதை தொடர்ந்து உடல் பருமன்,…

கும்பகோணத்தில் நடைபெற்ற சிறுதானிய உணவு திருவிழாவில் கம்பு, கேழ்வரகு, திணை , சாமை உள்ளிட்ட பல்வேறு சிறுதானியங்களில் உணவு வகைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

உணவு பழக்க வழக்கங்கள் மாறியதை தொடர்ந்து உடல் பருமன், நீரிழிவு , இரத்த
அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மக்களிடையே அதிகரித்து வருகிறது . இதனை
தவிர்ப்பதற்கு நமது பாரம்பரிய உணவு முறைகளை கையாள வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தி பல விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனையும் படியுங்கள்: 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திரு நாள்கதிர் விழா

இதன் ஒரு பகுதியாக  கும்பகோணத்தில் இன்று சிறுதானியங்களில் உருவாக்கப்பட்ட உணவு வகைகளுடன் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது. இதில் கம்பு ,கேழ்வரகு , திணை , சாமை, சோளம் உள்ளிட்ட சிறு தானியங்களில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

200க்கும் மேற்பட்டோர் தங்களது படைப்புகளை இதில் காட்சிப்படுத்தியிருந்தனர்.
மேலும், சிறுதானிய மகசூலை அதிகரிக்கும் வகையில் அதி நவீன கருவிகளும் இந்த உணவு திருவிழாவில் இடம் பெற்றிருந்தன.

இதனையும் படியுங்கள்: ”ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி

முற்றிலும் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுகளை காண பார்வையாளர்கள் அதிகமாக வந்தனர். புதிய புதிய சிறுதானிய உணவுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கு. பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.