28.6 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

நபிகள் குறித்த அவதூறு கருத்து; பாஜக நிர்வாகி கைது

நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதவிட்ட உத்தரபிரதேச மாநில பாஜகவை சேர்ந்த ஹர்சித் ஸ்ரீவத்ஷாவை  போலீசார்  செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தின் முன்னாள் இளைஞரணி செயலாளர் ஹர்சித் ஸ்ரீவத்ஷா நேற்று  நபிகள் குறித்து அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹர்சித் ஸ்ரீவத்ஷாவுக்கு எதிராக மதம், இனம், மொழி ஆகியவற்றின் மீது அவதூறு கருத்துக்களை பரப்புவதற்கான தண்டடை பிரிவு 153ஏ, 295ஏ, 507 மற்றும் 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு கொலோனல்கஞ்ச் காவல் நிலையத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய ஏடிஜிபி பிரசாந்த் குமார், பாஜகவின் கான்பூர் மாவட்ட முன்னாள் இளைரணி செயலாளர் ஹர்சித் ஸ்ரீவத்ஷா மத தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து பரப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கமிஷனர் விஜய் சிங் மீனா கூறுகையில், மத ரீதியிலான தவறான கருத்துக்களை பரப்புபவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என கூறினார்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா முகமது நபிகள் குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து கான்பூரில் கலவரம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading