சிவகங்கை செகுடப்பர் கோயில் பங்குனி திருவிழா – சாமி வேடமிட்டு வேண்டுதல்களை நிறைவேற்றிய பக்தர்கள்!

சிவகங்கை செகுடப்பர் கோவில் பங்குனி பொங்கல் விழாவில் விநோத முறையில் சேறுபூசி ஆட்டம் பாட்டம், புலிக்குத்தும் வேட்டை முதலியவை ஆராவாரத்துடன் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் குரும்பலூர் கிராமத்தில் செகுடப்பர்…

சிவகங்கை செகுடப்பர் கோவில் பங்குனி பொங்கல் விழாவில் விநோத முறையில் சேறுபூசி ஆட்டம் பாட்டம், புலிக்குத்தும் வேட்டை முதலியவை ஆராவாரத்துடன் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் குரும்பலூர் கிராமத்தில் செகுடப்பர் கோயில் பங்குனி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் இத்திருவிழாவில் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற,
நேர்த்தி கடன் வைத்து சுவாமி வேடங்கள், எமதர்மன், கிழவன்,கிழவி, குறவன் குறத்தி, என்றும் குழந்தை வரம் வேண்டுவோர் வைக்கோல் பூதம் , என பல்வேறு
வேடங்களில் வந்து தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். 

மேலும் இக்கிராமத்திற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் , மஞ்சள் மற்றும் கருப்பு வண்ணங்களில் பொட்டு வைத்து வரவேற்றனர். மேலும் பக்தர்கள் இங்கு இருக்கும் சுவாமிக்கு இரும்பு ,ஈயம், வெள்ளி போன்ற பொருள்களில் வேல் காணிக்கை செலுத்துகின்றனர். செகுடப்பர் சுவாமிக்கு பெண்கள் மாவிளக்கு வைத்தும், கரும்பு தொட்டில் எடுத்தும் வழிபட்டனர்.

200 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பாரம்பரியமாக இத்திருவிழாவை இக் கிராம மக்கள்
கொண்டாடினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.