அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் தேசியப் பாடலை இசைப்பது தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் பிறப்பித்த வழிகாட்டுதல்களை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.
இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் , நீதிபதி ஜாய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டதுடன், வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்கு எந்தவொரு தண்டனை விளைவுகளையும் அவை பரிந்துரைக்கவில்லை என்றும் குறிப்பிட்டது.
அந்த வழிகாட்டுதல்கள் ஒரு நெறிமுறை மட்டுமே என்றும், அவற்றைப் பின்பற்றுவதற்கு எந்தக் கட்டாயமும் இல்லை என்றும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் குறிப்பிட்டார். மேலும், அதை பின்பற்றாதவர்களுக்கு எந்தவித தண்டனையும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







