விதிகளை மீறி நடந்த ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு: தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படக்குழு, விதிகளை மீறி வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, படப்பிடிப்பிற்கு தடை விதித்து தென்காசி மாவட்ட ஆட்சியார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர்…

தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படக்குழு, விதிகளை மீறி வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, படப்பிடிப்பிற்கு தடை விதித்து தென்காசி மாவட்ட ஆட்சியார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த படத்தின் படபிடிப்பு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படக்குழு விதிகளை மீறி படப்பிடிப்பு நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

விதிகளை மீறி வனப்பகுதியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வெடிகுண்டுகளை வெடிக்க செய்து படப்பிடிப்பு நடத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது எப்படி என்று வன ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், படப்பிடிப்பு பகுதியில் மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது.

இதனைத்தொடர்ந்து, களக்காடு வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த தடை விதித்துள்ளதாக, தென்காட்சி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.