குடிசை மாற்று வாரியம் மசூதிகள், கோவில்கள், தேவாலயங்களை இடிக்காமல், குடியிருப்புகளை அகற்ற வேண்டுமென ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதிகளில் உள்ள மசூதியில் 50ம் ஆண்டு பொன்விழா நடைபெற்றது. இதில் மனிதநேயம் மக்கள் கட்சியின் தலைவர், ஜவாஹிருல்லா, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதிகளில் குடிசை மாற்று வாரியக் கட்டிடங்கள் பழமை அடைந்து விட்டதால் அதை இடித்து விட்டு அதே இடத்தில் அப்பகுதி மக்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டித் தரப்படும் என்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து கூட்டத்தில் பேசிய இஸ்லாமிய அமைப்புகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத கோவில்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கூறினர். அவற்றைத் தவிர்த்து பழுதடைந்த வீடுகளை மட்டும் அகற்ற வேண்டும் என்றும் அதே இடத்தில் மக்களுக்கு மீண்டும் புதிய வீடுகள் கட்டி தர வேண்டுமென முதலமைச்சருக்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடையே பேசினார். அப்போது குடிசை மாற்று வாரியம் சார்பில் பழுதடைந்த குடியிருப்புகளை அகற்றி புதிய கட்டிடங்கள் கட்டித் தரப்படும் என்று குடிசை மாற்று வாரியம் அறிவித்துள்ளது. எனவே மத நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மசூதிகள், கோவில்கள், தேவாலயங்கள் ஆகியவற்றை இடிக்காமல் பழுதடைந்த குடியிருப்புகள் மட்டும் அகற்றப்பட வேண்டும் என தமிழக அரசை ஜவாஹிருல்லா கேட்டுக்கொண்டார்.
மேலும் இஸ்லாமிய அமைப்புகள் மீது நடத்தப்பட்ட சோதனைக் குறித்து பேசிய அவர்,மோடி அவர்கள் பிரதமராக வந்த பொழுது இந்திய கோட்பாடுகளுக்கு எதிராக என்.ஐ.எ, சிபிஐ அமலாக்கத்துறை இதையெல்லாம் பயன்படுத்தி தன்னுடைய அராஜகத்தை கட்டவிழ்த்துள்ளார். இந்த வரிசையில் அமலாக்கத்துறை, இந்திய அரசின் போலீஸ், படை சூழ இதுபோன்ற விசாரணை நடத்தி வருகிறது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனக் கூறினார்.
மதுரையில் சோதனை என பெண்மணியின் வீட்டிற்கு அதிகாலையை சென்று அராஜகமாக செயல்படுகின்றனர். என்.ஐ.எ, சிபிஐ அமலாக்கத்துறை போன்றவை கொண்டு இது போன்று செயல்படுகளில் ஈடுபடுவது கண்டிக்கதக்கது. இது போன்ற நடவடிக்கைகள் மாநில அரசின் உரிமைகளை பறிப்பதற்காக எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார்.