சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் அனைத்தும் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சீமான் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக புரட்சிகர கொள்கையை முன்னிறுத்தி மாநிலம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், இலவசங்களை ஒழித்து மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும் எனவும், சுங்கச்சாவடிகள் அனைத்தும் அகற்றப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.







