ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட 600 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் இலங்கைக்குக் கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத் துறையினர் சோதனை மேற்கொண்டபோது, இலங்கைக்கு கடத்துவதற்காக 50 லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட 600 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்து வனத் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
-ம.பவித்ரா








