அதிமுகதான் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கண்ணியமிகு காயிதே மில்லத்தின் 127வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கமிஷன், கலெக்ஷன், கரப்ஷென் இதுதான் திமுக. திமுகவின் ஊழல் விவகாரங்களை அதிமுக ஏற்கனவே ஆளுநரிடம் கொடுத்துள்ளது. அதிமுக தான் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. அதிமுக சிறந்த எதிர்க்கட்சி என்பதற்கு உதாரணமாக தனியார் தொலைக்காட்சி ஒன்று கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது” என்று கூறினார்.
பாஜக தலைவர் அண்ணாமலை 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தொடர்ச்சியாக சொல்லி வருகிறார். கனவு காண்பது அவர்களின் கடமை. ஆட்சியைப் பிடிப்பதற்காக தான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறார்கள். எந்த கட்சியினர் வேண்டுமானாலும் கனவு காணலாம், அது அவர்களின் உரிமை என்ற ஜெயக்குமார், அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே பெரிய விரிசல் இல்லை என்றும் கூறினார்.







