மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டிய கணவன், வீட்டிற்குள் சென்று கணவரும் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மங்கநல்லூரை அடுத்த பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பி உள்ளார். இவருக்கும் ஜெய்னத் பிவி என்பவருக்கும் இடையே கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.
ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் மனைவியின் நடத்தையின் மேல் சந்தேகம் கொண்ட அறிவழகனுக்கும் அவர் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட தகராறு காரணமாக அரிவாளால் மனைவியை அறிவழகன் வெட்டியுள்ளார். இதில் வாய், கழுத்து, கைகள் ஆகிய இடங்களில் வெட்டுப்பட்ட ஜெயினத் பீவி படுகாயம் அடைந்தார். மேலும், வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு அறிவழகன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெயினத் பிவியை அருகில் உள்ளவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







