மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றம் காரணமாக ஐந்தாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு, வானகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படகுகள், பைபர் படகுகள் ஆகியவை பாதுகாப்பாக துறைமுகங்கள் மற்றும் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: உக்ரைன் – ரஷ்யா, இன்று மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை
கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லாத காரணத்தால் மழைக்கால நிவாரணம் போன்று தற்போதும் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, கனமழை எதிரொலியாக இன்று 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.