கோவையில் 11-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கோவை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி தனது குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் உள்ள பள்ளில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவிக்கும் தடாகம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 19) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது.
இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்த நிலையில், இந்த விவகாரம் மாணவியின் தாய்க்கு தெரியவந்துள்ளது. பின்னர் மகளை கண்டித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது காதலன் ஆனந்திடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆனந்த் மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி தேனிக்கு கடத்தி சென்றார்.
அங்குள்ள தனது பாட்டி வீட்டில் மாணவியுடன் அவர் வசித்து வந்த நிலையில், மாணவியின் பெற்றோர் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி தடாகம் காவல்நிலையத்தில்
புகாரளித்தனர். அதன் பேரில் மாணவியை கடத்தி சென்ற ஆனந்தை போலீசார் தேடி வந்த நிலையில் அவர்கள் தேனியில் பதுங்கியிருந்த தகவலறிந்து தேனிக்கு
சென்று மாணவி மற்றும் ஆனந்தை மீட்டனர்.
பின்னர் அவர்களிடம் துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆனந்த் மாணவியை கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆனந்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-இரா.நம்பிராஜன்








