முக்கியச் செய்திகள்செய்திகள்

“பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் கோரிக்கை.!

“பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்”  என தமிழ்நாடு அரசுக்கு நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு.  இவர் நேற்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதும், மற்ற நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் நோட்டம் விட்டுள்ளனர். இவரைப் பற்றிய தகவல்களையும் விசாரித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தன்னை நோட்டம் விடும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறைக்கு நேசபிரபு தகவல் தெரிவித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் கூறிய நேசபிரபுவிடம், நேரில் வந்து புகார் அளிக்கும்படியும், போதிய காவலர்கள் இல்லை என்றும் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதையும் படியுங்கள் ; நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவுக்கு அறுவை சிகிச்சை நிறைவு – ICUக்கு மாற்றம்!

இதையடுத்து மீண்டும் மர்ம நபர்கள் பின்தொடர பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டுள்ளார். அவ்வாறு காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதனால் கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதை அறிந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் மெத்தனப்போக்கில் செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்களும், அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேசபிரபு மீதான கொலைவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதில் நியூஸ்7 தமிழ் ஊழியர்கள் மற்றும் பல பத்திரிகையாளர்கள்  பங்கேற்றனர்.

இந்த ஆர்பாட்டத்தில் பேசிய நியூஸ்7 தமிழ் டிஜிட்டல் பிரிவின் பொறுப்பு ஆசிரியர் சுகிதா சரங்கராஜ் தெரிவித்ததாவது.. 

“நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசப்பிரபுவின் ஆடியோ கேட்கும் போது மனம் கணத்துவிட்டது. பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். பத்திரிக்கை துறைக்கு இளைய தலைமுறை வர அஞ்சக்கூடும் நிலை உருவாகியுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு பொறுப்பாசிரியர்  சுகிதா சாரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இதனித் தொடர்ந்து பேசிய நியூஸ்7 தமிழ் பொறுப்பு ஆசிரியர் சரவணன் கூறியதாவது,

“நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு 62 இடங்களில் வெட்டப்பட்டுள்ளார். இதனால், கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். மேலும்,  இந்த மாதிரியான கொலைவெறி தாக்குதல் இனி எந்த பத்திரிக்கையாளர்களுக்கும் நடைபெறக் கூடாது.  மேலும், பத்திரிக்கையாளர்கள் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.

இதனைத் தொடர்ந்த பேசிய மூத்த பத்திரிக்கையாளர் ஷபிர் அகமது தெரிவித்ததாவது.. 

“நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் ஆடியோவை கேட்கும் போது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாத போலீசார் மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பத்திரிகையாளர்களை கட்சிசாயம் பூசி முத்திரை குத்துவது முதலில் அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும் ”  என ஷபிர் அகமது கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

இனி பேருந்து எங்கு உள்ளது என தெரிந்துகொள்ளலாம்!

Halley Karthik

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் தேரோட்டம்!

Web Editor

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading