கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டவுடன் பதினெட்டாம் படி வழியாக பக்தர்கள் சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 16ஆம் தேதி முதல் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். இந்த பூஜை 20 ஆம் தேதி வரை நடைபெறும். 20 ஆம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு கோயில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.மேலும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.






