கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்கட்டமாக ரூ.59 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 13,51,362 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று 241 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மேலும் 6,846 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக, திங்கட்கிழமை முதல் 24- ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரனா பரவலை தடுக்க மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.59 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளில் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.







