வாணியம்பாடியில் பாலாற்று பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் 118 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கச்சேரி சாலையில் உள்ள பாலாற்று பெருவெள்ளத்தில் இறந்த 200 பேரின் நினைவாக நினைவு தூணானது வைக்கப்பட்டுள்ளது. 1903-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சிகாலத்தில் இதே நாள், 12-11-1903 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாலாற்று பெரு வெள்ளத்தில் சிக்கி வாணியம்பாடி நகரத்தில் ஒரே நேரத்தில் 200 பேர் பலியானார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர்களின் 118 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பாலாறு பாதுகாப்பு சங்கதலைவர் வெங்கடேசன் தலைமையில் இறந்த 200 பேரின் நினைவு தூணுக்கு மலர் மாலைகள் வைத்து மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதில், திரளானோர் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள் மீண்டும் பாலாற்றில் பெருவெள்ளம் வருவதை தடுக்க மக்கள் யாரும் பாலாற்றை ஆக்கிரமிப்பை செய்ய கூடாது கழிவுகளை கலக்க கூடாது. ‘நதியை தெய்வம் போல் கருத வேண்டும்’ என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் இந்த அஞ்சலி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.