மீண்டும் தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும் என குஜராத் மாநில அரசுக்கு, அங்கு வாழும் தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குஜராத் மணி நகர் பகுதியில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் படிப்பதற்காக தமிழ் வழி செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்த பள்ளி மூடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தநிலையில், குஜராத்தில் அமைந்துள்ள சர்வதேச நிதி சேவைகள் மையத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை பத்திரிக்கை தகவல் மையம் அழைத்துச் சென்றுள்ளது. இதில், நியூஸ் 7 தமிழ் சார்பில், தலைமை செய்தியாளர் சுடலைக்குமார் சென்றுள்ளார்.
மணிநகர் பகுதிக்குச் சென்ற அவர் அங்குள்ள தமிழர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்வழி பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழர்கள் முன் வைத்தனர்.
இதையும் படிக்கவும்: நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு
அப்போது தமிழ் மக்கள் கூறுகையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் மணி நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசித்து வருகின்றனர். 1972ம் ஆண்டு முதல் இங்குள்ள தமிழ் சங்கம் சார்பில் அறக்கட்டளை துவங்கப்பட்டது.
இந்த அறக்கட்டறை வாயிலாக குஜராத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்காக 1973ம் ஆண்டு 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயிலும் பள்ளி தொடங்கப்பட்டது. அங்கு அனைத்து பாடங்களும் தமிழ் மொழியிலே நடத்தப்பட்டது.
2020ம் ஆண்டு கொரோனா பரவலின் போது பல மாணவர்கள் ஆங்கில வழிக் கல்விக்கு மாறியதால் பள்ளி மூடப்படும் நிலை உருவானது. தமிழ் மக்களும், தமிழ் படிக்க விரும்பும் குஜராத் மக்களுக்கும் உதவும் வகையில் இந்த பள்ளி அமைந்துள்ளது. தற்போது மீண்டும் தமிழ் வழி பள்ளியை திறக்க குஜராத் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.