கொரோனாவால் கணவனை இழந்த மனைவி அரசு உதவ கோரிக்கை

ராசிபுரம் அருகே கொரோனாவால் கணவரை இழந்த பெண் தனது குழந்தைகளை காப்பாற்ற அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த மலையாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சரவணன் – கோமதி தம்பதியினர்.…

ராசிபுரம் அருகே கொரோனாவால் கணவரை இழந்த பெண் தனது குழந்தைகளை காப்பாற்ற அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த மலையாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சரவணன் – கோமதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். லாரி ஓட்டுநராக பணியாற்றிய சரவணன், கடந்த மாதம் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு பணிக்கு சென்றபோது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

தனது 2 பிள்ளைகளுடன் கோமதி

இந்நிலையில், கணவரை இழந்து வாழும் கோமதி, தனது இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்ற முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் தனக்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் எனவும் கோமதி கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.