மாநிலங்களவை தேர்தல் : போட்டியின்றி தேர்வான தமிழ்நாட்டு வேட்பாளர்கள்…….!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட தமிழ் நாட்டை சேர்ந்த 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ்நாடு உட்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில், திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.

தேர்​தல் ஆணைய அறிவிக்​கை​யின்​படி, வேட்​புமனு தாக்​கல் கடந்த பிப்​.26-ம் தேதி தொடங்​கியது. திமுக கூட்​ட​ணி​யில், திமுக சார்​பில் அக்​கட்​சி​யின் மாநிலங்​களவைக் குழு தலை​வர் திருச்சி சிவா, செய்​தித் தொடர்பு பிரிவு செய​லா​ளர் கான்​ஸ்​டன்​டைன் ரவீந்​திரன், காங்​கிரஸ் சார்​பில் கிறிஸ்​டோபர் திலக், தேமு​திக பொருளாளர் எல்​.கே.சுதீஷ் ஆகியோர் வேட்​புமனு தாக்​கல் செய்​தனர்.

அதி​முக கூட்​ட​ணி​யில் அதி​முக சார்​பில் முன்​னாள் மத்​திய அமைச்​சர் தம்​பிதுரை. பாமக தலை​வர் அன்​புமணி ஆகியோர் வேட்​புமனு தாக்​கல் செய்​தனர். மேலும், பாமக நிறு​வனர் ராம​தாஸ் தரப்​பில் ப.சு​வாமி​நாதன் உள்​ளிட்ட 6 சுயேச்சை வேட்​பாளர்​கள் வேட்​புமனு தாக்​கல் செய்​தனர். வேட்​பு மனு தாக்​கல் கடந்த 5-ம் தேதியுடன் நிறைவடைந்​தது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. இதில், டாக்டர் அன்புமணி, கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், கிறிஸ்​டோபர் திலக், எல்.கே.சுதீஷ், மு.தம்பிதுரை, திருச்சி சிவா ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  ஏனைய சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இனையடுத்து வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு இன்று கடைசி நாளான  இன்று திமுக வேட்பாளர்கள் 4 பேர், அதிமுக வேட்பாளர்கள் 2 பேர் என 6 பேரைத்தவிர வேறு யாரும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடாததால், மேற்கண்ட 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.