மிசோரத்தில் கட்டுமானப் பணியின்போது ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிசோரம் மாநிலம் சைராங் பகுதிக்கு அருகே புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த பாலம் இன்று காலை 10 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் படுகாயமடைந்தனர். மேலும் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஐஸ்வாலில் இருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் நடைபெற்ற இந்த விபத்தில் இன்னும் அதிகமானோர் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும், இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இதையும் படியுங்கள் : சந்திரயானும்… தமிழர்களும்…!!
விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 17 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், சிக்கியுள்ள 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.