“ராகுல் காந்தி பிரதமராவதும், உதயநிதி முதலமைச்சராவதும் நடக்காது!”- அமித் ஷா அதிரடிப் பேச்சு!

என்.டி.ஏ. கூட்டணியே வெற்றிபெறும் என பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

நெல்லையில் நடைபெற்ற பாஜகவின் பூத் கமிட்டி மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது, காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் எதிர்கால இலக்குகளை அவர் கடுமையாக விமர்சித்தார்.

அமித் ஷா பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் ஒரே லட்சியம், தனது மகன் ராகுல் காந்தியை இந்திய நாட்டின் பிரதமராக அமர வைப்பதுதான். அதேபோல, தி.மு.க.வின் கனவு, முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக ஆக்குவதுதான்” என்று கூறினார்.

ஆனால், இந்த இரண்டுமே நடக்காது என்றும் அமித் ஷா திட்டவட்டமாகக் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியே (என்.டி.ஏ.) வெற்றி பெறும் என்றும், அதேபோல, தமிழகத்திலும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அமித் ஷாவின் இந்த உரை, எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் குறித்த பா.ஜ.க.வின் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்துவதோடு, வரவிருக்கும் தேர்தல்களுக்கான கட்சியின் வியூகத்தையும் எடுத்துரைப்பதாக அமைந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.