உக்ரைன் விவகாரத்தில் தலையிட்டால் தக்க பதிலடிகொடுப்போம் என அமெரிக்காவிற்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சோவியத் யூனியனில் ஓரு அங்கமாக இருந்து வந்த உக்ரைன், 1991-ல் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனி நாடானது. இதனால், ரஷ்யாவின் கலாச்சாரம், அரசியல் கருத்துகளை ஒத்துப்போகும் நாடாக உக்ரைன் இருந்து வருகிறது. ஆனால், உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதனை அடுத்து, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைனை சேர்க்க அமெரிக்கா முயற்சித்தது. நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைனை இணைத்தால் மேற்கத்திய நாடுகள் மிகுந்த பலம் பெற்றுவிடும் என ரஷ்ய அதிபர் புதின் உணர்ந்ததால் இதை எதிர்த்தார். மேலும், உக்ரைன் எல்லையில் சுமார் ஒரு லட்ச ராணுவ வீரர்களையும், பல அயுதங்களையும் ரஷ்யா நிறுத்தியது. இதனால் உருவான பதற்றத்தைத் தணிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதே நேரத்தில் உக்ரைன் விவகாரத்தில் பதற்றம் நீடிப்பதற்கு மேற்குலக நாடுகளே காரணம் என ரஷ்ய அதிபர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதில் தலையிட மாட்டோம் என அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் உறுதி அளிக்க வேண்டும் என்றும் மீறினால் தக்க பதிலடிகொடுப்போம் என அமெரிக்காவிற்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.