முக்கியச் செய்திகள் தமிழகம்

புதிய மதுபான தொழிற்சாலைகள் திறக்க திட்டம்

புதிய மதுபான தொழிற்சாலைகளை திறக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கலால்துறை இணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ளார்.  

புதுச்சேரியில் ஏற்கனவே 5 மதுபான தொழிற்சாலைகளும் ஒரு பீர் தொழிற்சாலையும் இயங்கி வருகிறது. இந்நிலையில் மாநில வருவாயை பெருக்கும் நோக்கில் புதுச்சேரி அரசு முடிவு மேலும் சில மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதியளிக்க முடிவு செய்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்காக கலால்துறை நிபந்தனைகளுடன் விண்ணப்பிக்கலாம் என கலால்துறை இணை ஆணையர் சுதாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், புதுச்சேரி கலால் விதிகள் சட்டம் 1970-ன்படி விண்ணப்பிக்க வேண்டும். மதுபான தொழிற்சாலை முதலீடு, சராசரி உற்பத்தி, தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும். ஆலை வளாக அமைப்பு, தண்ணீர் தேவைகள், சுத்திகரிப்பு முறை ஆகியவற்றை முழுமையாக குறிப்பிட வேண்டும். எந்த இடத்தில் ஆலை அமைக்கப்பட உள்ளது. குறைந்தபட்சம் 4 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

எந்தவித குற்ற பின்னணியும் இல்லை மற்றும் மாநில அரசுகளின் கருப்பு பட்டியலில் இடம்பெறவில்லை என்பதை விண்ணப்பதாரர் உறுதி செய்ய வேண்டும். கடந்த 3 ஆண்டு வருமான வரி தாக்கலை சமர்பிக்க வேண்டும், விண்ணப்பதாரரின் ஆண்டு வருவாய் ரூ.100 கோடியாகவும், அதில் விண்ணப்பதாரரின் மதிப்பு குறைந்தபட்சம் ரூ.50 கோடியாகவும் இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர், இந்தியாவில் மதுபான உற்பத்தி தொழிலில் குறைந்தபட்சம் 5 ஆண்டு அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும், விண்ணப்பதாரர் கண்டிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 3 லட்சம் பெட்டிகள் மதுபானம் தயாரித்தவராக இருத்தல் வேண்டும், இதுதவிர கலால் ஆணையர் நிபந்தனைகளை ஏற்க வேண்டும், கலால்துறைக்கு விண்ணப்பங்களை நிராகரிக்க உரிமையுண்டு, இந்த நிபந்தனைகளை ஏற்று மதுபான ஆலை நடத்த முன்வருவோருக்கு முதல்கட்ட அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram