மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், புதுச்சேரியில் உள்ள பல்வேறு பிரச்னைகள் தொடர்பாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 31ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும்: கோவில்பட்டியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி!
மத்திய அரசு தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டை எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதுச்சேரி அரசில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி நேரு வீதி, காந்தி வீதி சந்திப்பில் இருந்து பேரணியாக புறப்பட்டவர்கள் முத்தியால்பேட்டை அங்காடி வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசின் இந்த பட்ஜெட்டானது மக்களுக்கு எதிரானதாகவும், சமூகத்திட்டங்களை ஒழித்துக்கட்டும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரி சலுகை வழங்கி உள்ளது என்றும், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும் மத்திய அரசிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்குதல், ரேஷன் கடைகளை திறக்காதது, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆளும் என்.ஆர் காங்கிரஸ் – பா.ஜ.க அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் கலந்த கொண்டனர்.