நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இதில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 3 மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1000ம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முகாமிட்டனர். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது.
இதையும் படிக்கவும்: ஆர்ஆர்ஆர் படக்குழுவினரை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்த விழாவில் பங்கேற்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து விருது வழங்கும் விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றது. இந்த பாடல் ஆஸ்கர் மேடையில் பாடப்பட்டது. அப்போது அந்த அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பியது.ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினரை பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “இந்த ஆஸ்கர் எதிர்பார்த்தது தான். நாட்டு நாட்டு பாடலில் புகழ் உலகளாவியது. பல ஆண்டுகள் நினைவில் நிற்கும் பாடலாக நாட்டு நாட்டு பாடல் இருக்கும். இசையமைப்பாளர் கீரவாணி, சந்திரபோஸ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் பாரட்டுக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ படக்குழுவை வாழ்த்தி பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கார்த்திகி கோன்சால்வ்ஸ், குனீத் மோங் மற்றும் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துகள். இந்தப் படம் நிலையான வளர்ச்சி மற்றும் இயற்கையோடு இணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை அற்புதமாக எடுத்துரைக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.