விசாகப்பட்டிணத்தில் உகாதி திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு காய்கறிகள் மற்றும் பூக்களின் விலை உச்சம் தொட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இந்துக்களின் புத்தாண்டாக உகாதி திருநாள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருநாளை முன்னிட்டு, அம்மாநில மக்கள், பல்வேறு காய்கறிகளால் ஆன பச்சடி செய்து, அதனை பிறரோடு பரிமாறி மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். மேலும் தங்களது வீடுகளை மாயிலை தோரணம் மற்றும் பூக்களால் அலங்கரித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், உகாதி திருநாள் மற்றும் பருவம் தவறிய மழை காரணமாக, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் பூக்களின் விலை 20 முதல் 30 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. மல்லிகைப் பூவின் விலை கிலோ ரூ.400-க்கும், ரோஜாக்களின் விலை கிலோ ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதையும் படியுங்கள் : இந்தியாவை அச்சுறுத்தும் XBB 1.16 வகை கொரோனா – அறிகுறிகள் என்னென்ன? தப்பிப்பது எப்படி?
அதேபோல், காய்கறிகளின் விலையும் பரவலாக அதிகரித்துள்ளது. வழக்கத்தைவிட 20 சதவிகிதம் உயர்ந்து காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு பண்டிகை நாளில் காய்கறிகள் மற்றும் பூக்களின் விலை அதிகரித்துள்ளதால், ஆந்திர மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.