இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, டிசம்பர் 11 மற்றும் 12, 2025 ஆகிய தேதிகளில் மணிப்பூருக்கு அரசுமுறைப்பயணம் மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் இருவேறு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் மாநில அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







