10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 2ம் தேதி, 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, மே 6-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை நடைபெறும் என அவர் தெரிவித்திருந்தார். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை நடைபெறும் எனவும், 12-ம் வகுப்பிற்கான பொது தேர்வு மே 5-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரையிலும் நடபெறும் என தெரிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதோடு, தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரையில், தோராயமாக 10-ம் வகுப்பிற்கு 17ம் தேதியும், 11-ம் வகுப்புகளுக்கு ஜூலை 7-ம் தேதியும், 12ம் வகுப்புக்களு ஜூன் 23-ம் தேதியும் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார்.
10, 11 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் 3,119 மையங்களில் 10, 11 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதர வகுப்பினருக்கு பிற்பகலில் ஆண்டு இறுதித் தேர்வும், 3-ம் பருவ தேர்வும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பொதுத்தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில், தேர்வறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தி, தேர்வெண் ஒட்டும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் பொதுத்தேர்வு & ஆண்டு இறுதித் தேர்வு முன்னேற்பாடுகளை பொறுப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தினர்.