சாலை விபத்துகளை தடுக்க, திருநங்கை மூலம் திருஷ்டி சுற்றி போட வைத்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடி மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனை தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே புதிய முயற்சியாக போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பழனி
மற்றும் அவ்ருடன் சில காவலர்கள், திருநங்கை ஒருவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்படும் பகுதிகளில் பூசணிக்காய் மற்றும்
எலுமிச்சம்பழத்தைக் கொண்டு திருஷ்டி சுற்றி போட வைத்துள்ளனர். மேலும் சாலைகளில்
பூசணிக்காயும் உடைத்துள்ளனர்.
இதுகுறித்து செய்திகள் வெளியானதை தொடர்ந்து, மதுரவாயல் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பழனியை காவல் கட்டுப்பாடு அறைக்கு மாற்றம் செய்து போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
“சாலை விபத்துகளை குறைப்பதற்கு அறிவியல் பூர்வமாகவும் தொழில்நுட்ப உதவியுடனும் பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து காவல்துறையினர் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட காவல் அதிகாரி சாலை விபத்துகளை குறைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், ஆனால் அவரது தனிப்பட்ட நம்பிக்கையின் காரணமாக பூசணிக்காய் உடைத்து திருஷ்டி சுற்றி போடும் நிகழ்வில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : ஒரே நாளில் ரூ.576 கோடிக்கு ஏலம் போன அரிய கற்கள்!! – எங்கு தெரியுமா??
இது தவிர்க்கக் கூடிய செயலாகும். தொழில்நுட்ப உதவியுடன் சாலை விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பது போன்ற நடைமுறைகள் மட்டுமே ஏற்புடையது. இதன் காரணமாக அந்த போலீஸ் அதிகாரி காவல் கட்டுப்பாட்டறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்”. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.