31.3 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

கோவை பேருந்து ஓட்டுனர் சர்மிளா மீது வழக்குப்பதிவு!

கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த சர்மிளா கோவையில் முதல் முறையாக பேருந்தை
இயக்கி முதல் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற பெயரை பெற்றவர்.  பிரபலமான சர்மிளாவைப் பலரும் பாராட்டினர்.  சர்மிளாவுக்கு கோவையைச் சேர்ந்த தனியார் பேருந்து நிறுவனம் காந்திபுரத்திலிருந்து சோமனூர் செல்லும் வழித்தடத்தில் பேருந்து இயக்க பணி வழங்கியது.  இதனைத் தொடர்ந்து அவர் திடீரென பணியை ராஜிநாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், சர்மிளாவிற்கு காரை அன்பளிப்பாக அளித்திருந்தார்.  இந்த நிலையில் இவர் கடந்த 2-ம் தேதி கோவை சத்தி ரோடு சங்கனூர் சந்திப்பு அருகே காரில் சென்ற போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.  இதனைத் தொடர்ந்து பணியில் இருந்த காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி அவரை விசாரித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள்: போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை: மக்களவை ஒப்புதல்!

அதனை வீடியோ எடுத்த சர்மிளா,  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறான தகவலுடன் பதிவிட்டதாக காவல் உதவி ஆய்வாளர் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இதன் பேரில்  இந்திய தண்டனைச் சட்டம் IPC 506(i), 509, 66C தகவல் தொழில்நுட்ப பிரிவின் (information technology act) கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading