பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, முன்கூட்டியே பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துளளார்.
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம்13 முதல் ஏப்.20-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த தேர்வுகளை தமிழகத்தில் இருந்து மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். 11, 12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகளும் அடுத்த மாதம் முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், பொதுத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளின் நிலை தொடர்பாக இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில், தேர்வுத் துறை சார்பில் வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துறை சார்ந்த இயக்குநர்கள், அனைத்து முதன்மை, மாவட்டக் கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து செய்தியர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, முன்கூட்டியே பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே செய்முறை தேர்வுகள் மார்ச் 6 ஆம் தேதி முதல் 10 தேதி வரை நடத்தப்படுவதாக இருந்தது.
தற்போது எழுத்துத் தேர்வு தேதிக்கும் செய்முறை தேர்வு தேதிக்கும் நாட்கள் குறைவாக இருப்பதால் சில நாட்கள் முன் கூட்டியே செய்முறை தேர்வுகள் நடத்த முடிவு செய்துள்தாக கூறினார். அதன் அடிப்படையில் 10,11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி முதல் 9 ந் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துளளார்.
பின்னர் தொடர்ந்து பேசிய அவர், மாணவர்கள் தேர்வுக்கு தாமதமில்லாமல் வந்து செல்ல பேருந்து வசதிகள், வகுப்பறையில் தண்ணீர் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்த சொல்லி உள்ளோம். ஜனவரி 30 ,31 மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதிகளில் தனித் தேர்வர்கள் மீண்டும் விண்ணப்பிக்களாம். திட்டமிட்ட படி சரியான நேரத்தில் பொது தேர்வு முடிவுகள் வெளியிப்படும். அதன்படி 12-ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் மே 5-ஆம் தேதியும், 11-ஆம் வகுப்பிற்கு மே 19-ஆம் தேதியும், 10-ஆம் வகுப்பிற்கு மே 17-ஆம் தேதியும் அறிவிக்கப்படும். அதன் பிறகு பேப்பர் சரிபார்ப்பு பணிகள் தொடங்கும் என்றும் கூறினார்.
- பி. ஜேம்ஸ் லிசா