சென்னை மெட்ரோ ரயில் பணியில் இருந்த சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலான கிரேனை திருடி ஆந்திராவில் விற்பனை செய்த மெட்ரோ ரயில் பணி ஊழியர்கள் மற்றும் திருட்டு வாகனத்தை வாங்கியவர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் மேடவாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிக்காக தனது ரூ.40 லட்சம் மதிப்பிலான கிரேன் வாகனத்தை வாடகைக்கு விட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி மேடவாக்கம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் வாகனம் திடீரென காணமல் போனது. இது தொடர்பாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார்; ஆய்வாளர் புஷ்பம் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து கிரேன் நிறுத்தப்பட்டிருந்த பகுதியின் அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்பொழுது, 4 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து கிரேனை திருடி
செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது போன்று சிசிடிவி கேமராவை பின் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நரசிம்ம ரெட்டி என்பவரிடம் இருந்து திருட்டு போன கிரேன் வாகனம் மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து தனிப் படை போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கார்த்தி என்பவரிடம் க்ரேன் வாடகைக்கு கேட்டதாக
கூறியுள்ளார்.
பின்னர் நரசிம்ம ரெட்டியின் வாக்குமூலத்தை தொடர்ந்து கார்த்திக் என்பவரை கைது
செய்து நடத்திய விசாரணையில் முரளி, சர்மா, திருநாவுக்கரசு என மேலும் மூன்று பேர் சம்மந்தபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இதற்கு வாடகையாக ரூபாய் ஐந்து
லட்சத்திற்கான காசோலையை முன்கூட்டியே பெற்றுகொண்டதும் தெரியவந்துள்ளது.
அதை தொடர்ந்து மீதமுள்ள முரளி, சர்மா, திருநாவுக்கரசு ஆகியோரை கைது செய்து
காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
கைது செய்த குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பம் உள்ளிட்ட தனிப்படையினரை பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் ஜோஷ் தங்கையா சால்வை அணி வித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
ம. ஶ்ரீ மரகதம்