பழனி கோயில் இரண்டாவது ரோப் கார் திட்டப்பணிகள் காலதாமதம் குறித்து. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க வேண்டும் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு உட்பட்ட உபகோவில்கள், கல்லூரிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்ட அவர், அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, பழனியை திருப்பதி போல தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் பழனி கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் எனவும் கூறினார்.
பக்தர்களின் வசதிக்காக இரண்டாவது ரோப்கார் பணியை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், இத்திட்டம் காலதாமதம் ஆனதற்கு கடந்த அதிமுக அரசே காரணம் எனவும் குற்றஞ்சாட்டினார்.







