’இது 17 வருடக் கனவு’: ஆக்‌ஷன் கிங் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

நடிகர் அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. நடிகர் அர்ஜுன், ஆஞ்சநேய பக்தர். இவர் சென்னை போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா…

நடிகர் அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

நடிகர் அர்ஜுன், ஆஞ்சநேய பக்தர். இவர் சென்னை போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

இதுபற்றி நடிகர் அர்ஜுன் கூறியதாவது: இந்த கோயில் என் 17 வருடக் கனவு. தாய், துணைவி, மகள்கள் என என் குடும்பம் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்றனர். இந்த கோயிலை நான் கட்டினேன் என்பதை விட, ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து, இந்தச் செயலை செய்யத் தூண்டியது என்பதுதான் உண்மை. ஆஞ்சநேயர் சாந்தமாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் இந்த ஒற்றைக்கல் சிலை (Monolithic) 180 டன் எடையுடையது.

இதுதான் முதல் 180 டன் எடையுடய ஆஞ்சநேயர் சிலை என்று கூறுகின்றனர். ஶ்ரீ ராமர், விநாயகர், நாகராஜர் சன்னதிகளும் உள்ளது. பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோயிலின் பிரதிஷ்டையை செய்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் துணைவியார் துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு வந்து தரிசனம் பெற்றார். அவர் வருகை எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. விரைவில் இந்தக் கோவில் பொது மக்களுக்காகத் திறக்கப்படவுள்ளது.

கொரோனாவால் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில் கடவுளின் அனுக்கிரங்களும் ஆசியும் மக்களுக்கு அவசியம். கடவுளின் அருள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும், அவர்கள் வாழ்வில் துன்பம் மறைந்து இன்பம் பெருக வேண்டும் என்பதே என் ஆசை. இவ்வாறு நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.