முக்கியச் செய்திகள்குற்றம்

ஆப்ரேஷன் கஞ்சா 2.0 – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

”ஆப்ரேஷன் கஞ்சா 2.0” கஞ்சா வேட்டை தொடர வேண்டும் என காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

டிஜிபி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை போதை பொருள் விற்பனைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை, ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0′ என்ற பெயரில் ஏப்ரல் 27ஆம் தேதி வரை தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகே, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை ஒழிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அவர், கடத்தல், பதுக்கல், விற்பனை ஆகிய சங்கிலி தொடரை உடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், போதை பொருள் விற்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், ரயில்வே போலீசாரும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்களை கைப்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், போதை பொருள் விற்பவர்கள், பின்னணியில் இருப்பவர்களை கண்காணிக்கும் பொறுப்பை, காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கூறிய டிஜிபி, கண்காணிப்பு பணிகளை, மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., கண்காணித்து, கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அண்மைச் செய்தி: “உள்நாட்டு விமான நிலையங்களில், காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை – தமிழ்நாடு நாடார் சங்கம்”

மேலும், போதை பொருள் ஒழிப்பு பணியில் சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகர காவல் ஆணையர்கள் நேரடியாக கவனம் செலுத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

மின்சார கட்டண உயர்வைத் திரும்பப் பெற அன்புமணி வலியுறுத்தல்

Web Editor

“கூலாக இல்லாவிட்டால் அரசியலில் 20 வருடங்கள் இருந்திருக்க முடியாது” – ஆளுநர்

Halley Karthik

கரூரில் 11 நாட்கள் புத்தக திருவிழா: அமைச்சர் செந்தில்பாலாஜி

EZHILARASAN D

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading