முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்

இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் அஜய் திட்டம் – முதற்கட்டமாக இன்று 212 பேர் டெல்லி வந்தடைந்தனர்…..

இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக இன்று 212 பேர் டெல்லி வந்தடைந்தனர்.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், இஸ்ரேலுக்கு நுழைந்தும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதன்பின்னர் பதிலடியாக இஸ்ரேலும் பதிலுக்கு நடத்தியதில் இரண்டு நாடுகளிலும் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா்.  5000க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் பின்னர் இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதல் நடத்தில்  காஸா பகுதியில் மின்சாரம், தண்ணீர் மற்றும் எல்லை ஆகியவற்றை தடை செய்தது.  இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேபோல போர் பிரகடணம் அறிவித்துள்ள இஸ்ரேலுக்கும் கண்டனங்கள் வலுத்து வலுகிறது.

ரஷ்யா, ஈரான், சவூதி உள்ளிட்ட நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  காஸா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை 7வது நாளாக தொடா்ந்து வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள வைர வியாபாரிகள், தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள், மாணவர்கள் என சுமாா் 18,000 இந்தியர்கள் இஸ்ரேலில் வசித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.  மேலும் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் குழு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை அழைத்து வர ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் மூலம்
முதற்கட்டமாக இன்று 212  பேர் அழைத்து வரப்பட்டனர். மேலும் அங்கு சிக்கியுள்ளவர்கள் படிப்படியாக தாயகம் அழைத்து வரப்பட உள்ளனர். போர் தீவிரமடைந்துள்ளதால், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

“டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது செல்லும்” – டெல்லி உயர்நீதிமன்றம்!

Web Editor

ஹெலிகாப்டர் விபத்து பற்றி அவதூறு: பாக். ட்விட்டர் கணக்குகள் மீது வழக்கு

EZHILARASAN D

ரயில் தண்டவாளங்களில் இரும்பு வளையங்களை திருடும் வீடியோ காட்சி.. – ரயில்வே போலீசாரின் அதிரடி நடவடிக்கை!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading